Connect with us

இலங்கை

இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணிவுடன் சந்திப்பு

Published

on

Loading

இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணிவுடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

Advertisement

அத்துடன் தற்போது பல்வேறு அபிவிருத்தி நிலைகளில் உள்ள பல இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த தூதுக்குழுவில் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி பி.டபிள்யூ.ஜி.சி. சாகரிகா போகஹவத்த, மற்றும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு பணிப்பாளர் நாயகம் திரு நிலுக கதுருகமுவ ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன