Connect with us

சினிமா

“இனிமேல் பொறுமையாக இருக்கமாட்டேன்” பரவிய வதந்தி.. சாய் பல்லவி விடுத்த எச்சரிக்கை..!

Published

on

"இனிமேல் பொறுமையாக இருக்கமாட்டேன்" பரவிய வதந்தி.. சாய் பல்லவி விடுத்த எச்சரிக்கை..!

Loading

“இனிமேல் பொறுமையாக இருக்கமாட்டேன்” பரவிய வதந்தி.. சாய் பல்லவி விடுத்த எச்சரிக்கை..!

Advertisement

சில நாட்களாகவே சாய் பல்லவி குறித்த செய்தி ஒன்று இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், இந்தியில் உருவாகிவரும் ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதா தேவியாக நடித்து வருகிறார். படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிப்பதால் அவர் அசைவ உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ணுவதாக செய்திகள் வெளியானது.

இதை அறிந்த நடிகை சாய் பல்லவி தனது X பக்கத்தில் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியை பகிர்ந்திருந்தார். அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், ‘ராமாயணம் படத்தில் சாய் பல்லவி சீதையாக நடிப்பதால் படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவுகளை உண்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார். இதனால் வெளியூர்களுக்கு செல்லும் போது கையோடு சமையல்காரர்களை அழைத்துச் செல்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த நியூஸ் கார்டோடு தனது X பக்கத்தில் பகிர்ந்த சாய் பல்லவி, “பலமுறை, உண்மையில், ஒவ்வொரு முறையும் எனக்கு எதிராக ஆதாரமற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், உள்நோக்கத்துடனோ அல்லது இல்லாமலோ பரப்பப்படுவதை காணும்போதெல்லாம் நான் அமைதியாகத்தான் இருந்திருக்கிறேன். ஆனால் தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் குறிப்பாக எனது படத்தின் வெளியீட்டின் போதோ, அல்லது எனது பட அறிவிப்புகள் வெளியாகும் சமயங்களிலேயோ இது போன்ற வதந்திகள் பரப்படுவது அதிகரித்து வருகிறது,அதை எதிர்த்து நிறுத்தவேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன்.

Advertisement

Most of the times, Almost every-time, I choose to stay silent whenever I see baseless rumours/ fabricated lies/ incorrect statements being spread with or without motives(God knows) but it’s high-time that I react as it keeps happening consistently and doesn’t seem to cease;… https://t.co/XXKcpyUbEC

இனி ஒருமுறை என்னை பற்றிய தவறான ஆதாரமற்ற வதந்திகளை செய்தியாகவோ அல்லது கிசுகிசுவாகவோ எந்த செய்தி ஊடகமோ அல்லது செய்தி பக்கமோ வெளியிடுவது என் கவனத்திற்கு வந்தால் நீங்கள் சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்” என்று ஆவேசமாக எச்சரிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். சாய் பல்லவியின் இந்த பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன