Connect with us

இலங்கை

படகு கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு

Published

on

Loading

படகு கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட  சம்பவம்  வெள்ளிக்கிழமை (13) காலையில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திராய்மடுஇ முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான கோடீஸ்வரன் வேணு ராஜ் (வயது 34 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

Advertisement

முகத்துவாரத்தில் இருந்து இயந்திர படகு ஒன்றில்  நேற்று இரவு இருவர் சென்று மீன் பிடித்து விட்டு மீண்டும் இன்று (13)  காலை 8 மணியளவில் முகத்துவாரம் கரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது படகு திடீரென கவிழ்ந்ததை அடுத்து ஒருவரை காப்பாற்றியதுடன் மற்றயவர் நீரில்  மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன