இலங்கை
மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தெளிவூட்டல் கருத்தரங்கு!

மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தெளிவூட்டல் கருத்தரங்கு!
மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான கருத்தரங்கானது நேற்று வியாழக்கிழமை(12) மூதூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான விளக்கங்களும் தெளிவூட்டல்களும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் வளவாளர்களாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். (ச)