Connect with us

இலங்கை

விமான நிலையத்தில் உணவின்றி சிக்கித் தவித்து வரும் 400 இண்டிகோ பயணிகள்! நடந்தது என்ன?

Published

on

Loading

விமான நிலையத்தில் உணவின்றி சிக்கித் தவித்து வரும் 400 இண்டிகோ பயணிகள்! நடந்தது என்ன?

துருக்கில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் சுமார் 400 இண்டிகோ பயணிகள் உணவின்றி சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பை வரவிருந்த இண்டிகோ பயணிகளே இவ்வாறு அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டுஇன் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

விமான பயணிகளில் ஒருவர் தனது பதிவில்,

“முதலில் விமானம் இருமுறை தாமதமானது, பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 12 மணித்தியாலங்கள் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது,

Advertisement

இதனால் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் விமான பயணிகளில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு எதுவும் வழங்கப்படவில்லை.

இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை, பயணிகளை அனுகவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன