இலங்கை
நாளை இந்தியா செல்லும் ஜனாதிபதி அனுர!

நாளை இந்தியா செல்லும் ஜனாதிபதி அனுர!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி அநுரகுமார செல்லும் முதல் வெளிநாடாக இந்தியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.