Connect with us

சினிமா

புஷ்பா பட வாய்ப்பை நிராகரித்த அந்த 3 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

Published

on

புஷ்பா பட வாய்ப்பை நிராகரித்த அந்த 3 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

Loading

புஷ்பா பட வாய்ப்பை நிராகரித்த அந்த 3 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

Advertisement

புஷ்பா 2 படம் வெளியான முதல் நாள் அன்று மட்டும் இந்த திரைப்படம் ரூ. 294 கோடி அளவுக்கு வசூல் செய்தது. இது எந்த ஒரு இந்திய படமும் செய்யாத சாதனையாகும். முதல் 2 நாட்களில் 449 கோடி ரூபாய் அளவுக்கு இந்த திரைப்படம் வசூல் செய்தது. 3 நாட்கள் முடியும் முன்னரே இந்த திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ‘புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புஷ்பா, புஷ்பா 2 என இரண்டு பாகங்களுமே மக்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடித்து இதுவரை எந்த ஒரு இந்திய படமும் படைக்காத சாதனையை படைத்துள்ளது. இத்தனை புகழை அள்ளிக்குவித்துள்ள புஷ்பா படத்தை இயக்கவேண்டும் என்று இயக்குநர் சுகுமார் முடிவு செய்தபோது அவர் எண்ணத்தில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன் இல்லையாம். மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்கு அவரது எண்ணத்தில் இருந்த அந்த 3 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

Advertisement

இயக்குநர் சுகுமார் முதல் முதலில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க அணுகிய நடிகர் தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவை தானாம். இதுவரை நல்லவர் கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த மகேஷ் பாபுவுக்கு செம்மரக்கடத்தல் கதையில் அந்த கதாபாத்திரம் தனக்கு நெகட்டிவாக அமைந்துவிடக்கூடாது என்று அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டாராம். அதேபோல், ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் அணுகிய முதல் நடிகை சமந்தா தானாம். ஏற்கனவே ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த சமந்தா மீண்டும் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க நோ சொல்லிவிட அந்த கேரக்டரில் ரஷ்மிகா நடித்தார்.

அதே போல் புஷ்பா படத்தின் முக்கிய வில்லன் பகத் பாசில் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் சுகுமார் முதலில் அணுகியது நடிகர் விஜய் சேதுபதியிடம் தானாம். அப்போது அவரிடம் தேதி இல்லாததால் புஷ்பா படத்தில் நடிக்கமுடியாமல் போனது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன