இலங்கை
யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற பெண்ணால் ஏற்பட்ட பரபரப்பு!

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற பெண்ணால் ஏற்பட்ட பரபரப்பு!
யாழ்ப்பாண பகுதியொன்றில் இளம் பெண் ஒருவர் தனது கழுத்தினை தானே கூரிய ஆயுதத்தால் அறுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பெண்ணின் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், குறித்த பெண் யார்? எந்த இடத்தை சேர்ந்தவர், கழுத்தினை அறுத்ததற்கான காரணம் என்ன? என்ற தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.