இலங்கை
இரண்டு நாளைக்கு கூடும் பாராளுமன்றம் : சபாநாயரை தெரிவு செய்ய நடவடிக்கை!

இரண்டு நாளைக்கு கூடும் பாராளுமன்றம் : சபாநாயரை தெரிவு செய்ய நடவடிக்கை!
பாராளுமன்றம் நாளை (17) கூடவுள்ளது. அமர்வுகள் இரண்டு நாளைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன்பிறகு நாடாளுமன்ற நடவடிக்கைகள் சாதாரணமாக இருக்கும்.
சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதையடுத்து, 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளது.
எனினும் சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி சார்பில் ஏற்கனவே 3 பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பிரதி சபாநாயகரின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.