Connect with us

இலங்கை

இளவாலை விபத்தில் குடும்பஸ்தர் சாவு!

Published

on

Loading

இளவாலை விபத்தில் குடும்பஸ்தர் சாவு!

யாழ்ப்பாணம், இளவாலையில் நேற்றிரவு  இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும்  76 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
நேற்றிரவு  9.30 மணியளவில் பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நின்றுக்கொண்டிருந்த போது தனியார் பேருந்து ஒன்று தனது சேவையை முடித்துவிட்டு சென்றுகொண்டிருந்த வேளை தந்தை, மகன் ஆகிய இருவர் மீதும் மோதியுள்ளது.

Advertisement

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளதோடு மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், பேருந்தை எடுத்துச் சென்ற இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ச)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன