Connect with us

இலங்கை

சாக்குப் பையிலிருந்த சிசுவின் சடலம்; பாதக செயலை செய்தது யார்?

Published

on

Loading

சாக்குப் பையிலிருந்த சிசுவின் சடலம்; பாதக செயலை செய்தது யார்?

மொரட்டுவை, அங்குலானை, இலக்க்ஷபத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் மிதந்த சாக்குப்பையிலிருந்து சிசு ஒன்றின் சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றுப் பகுதியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் சிலர் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சாக்குப்பை ஒன்றைச் சோதனையிட்டுள்ளனர்.

Advertisement

அதன் போது, சாக்குப்பையினுள் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிசு தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன