Connect with us

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிரான மனு தள்ளுபடி

Published

on

Loading

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிரான மனு தள்ளுபடி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி ஊடாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

Advertisement

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மான்டேக் சரத்சந்திரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

Advertisement

அவர் நீதிமன்றத்தை அவமதித்து தொடர்ந்து பதவியில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று, நீதிமன்றத்தின் நீதிபதிகனான, நிஷங்க, பந்துல கருணாரத்ன மற்றும் சஷி.மகேந்திரன் ஆகியோர் முன்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில் அழைக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதியின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, தமது கட்சிக்காரரின் உடன்படிக்கை சாத்தியம் எனவும், இந்த மனுவை தீர்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதன்போது, மனுதாரரின் சட்டத்தரணி சாந்த ஜயவர்தன, தமது கட்சிக்காரரும் இணங்குவதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

Advertisement

அதன்படி, மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்ற குழாம், மனுவை வாபஸ் பெற அனுமதித்ததுடன், தள்ளுபடி செய்யவும் முடிவு செய்துள்ளது

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன