Connect with us

இலங்கை

யாழில் பேருந்தில் பயணித்த நபரொருவர் தீடிரென உயிரிழப்பு!

Published

on

Loading

யாழில் பேருந்தில் பயணித்த நபரொருவர் தீடிரென உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த முதியவர் இன்றையதினம் (16-12-2024) காலை 10.30 மணி அளவில் 782 வழித்தட பேருந்தில், சுழிபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளார்.

இதன்போது அவருக்கு இடைவழியில் வாயில் இருந்து நுரை வெளிவந்தது.

Advertisement

பின்னர் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Advertisement

மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன