Connect with us

இந்தியா

Thirumavalavan | “எனது நம்பகத்தன்மை மீது கை வைக்கிறார்கள்… அவர்களது குறி திருமா இல்லை.. திமுக தான்” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

Published

on

Thirumavalavan | “எனது நம்பகத்தன்மை மீது கை வைக்கிறார்கள்... அவர்களது குறி திருமா இல்லை.. திமுக தான்” - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

Loading

Thirumavalavan | “எனது நம்பகத்தன்மை மீது கை வைக்கிறார்கள்… அவர்களது குறி திருமா இல்லை.. திமுக தான்” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

தொடர்ந்து எனது நம்பகத்தன்மை மீதே கை வைக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக நான் இருக்கேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. தற்போது என்னை சுற்றி ஏராளமான விவாதங்கள் நடைபெறுகிறது. அது நம் மீது வைத்துள்ள மரியாதைக்காக இல்லை. நம்மை எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்று சக்திகள் சதி அது.

நம்மைப் பற்றியே பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடையவதற்கு இல்லை. அதில் சூது இருக்கிறது. சூழ்ச்சி இருக்கிறது. சதி பின்னப்பட்டு வருகிறது. அவர்களின் உண்மையான குறி திமுக தான். திருமாவளவன் இல்லை. திமுகவை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று எண்ணும் சக்திகள் திருமாவை ஒரு தூததாக பயன்படுத்தி அதை நிறைவேற்றி விட வேண்டும் என நினைக்கிறார்கள்.

Advertisement

அதற்கு பலியாகும் அளவிற்கு திருமாவளவன் பலவீனமானவன் இல்லை திருமாவளவன். ஏதோ அழுத்தம் அச்சுறுத்தல் என்கிறார்கள். என்னுடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும். ஏன் இதை திரும்பத் திரும்ப நான் சொல்கிறேன் என்றால், எனது நம்பகத்தன்மை மீதே கை வைக்கிறார்கள். திருமாவளவன் இங்கு பேசிக்கொண்டு அங்கு ஏதோ வேலை செய்கிறார் என்கிறார்கள். அந்த அரசியல் எனக்கு தெரியாது. அந்த அரசியல் தேவையில்லை.

திமுகவுடன் பேசிக்கொண்டு மறைமுகமாக பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதோ என்ற ஒரு சந்தேகத்தை என் மீது எழுப்புகிறார்கள். என்னை நம்பக்கூடிய என் தோழர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் சனாதனத்திற்கு எதிராக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் எங்கள் நலன் பெரிது என்று சனாதனம் உள்ள அணியில் இணையமாட்டோம்.

அதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் எவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்பட்டாலும், அது தாங்கிக் கொள்ள வலிமை விசிகவிற்கு உண்டு” என தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன