Connect with us

இந்தியா

அடையாளம் காணப்படாத உடல்; முக்கிய ஆதாரம் டெய்லர் டேக், இ- வாலட்… 30 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி ஒடிசா போலீஸ் தட்டித் தூக்கியது எப்படி?

Published

on

police2

Loading

அடையாளம் காணப்படாத உடல்; முக்கிய ஆதாரம் டெய்லர் டேக், இ- வாலட்… 30 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி ஒடிசா போலீஸ் தட்டித் தூக்கியது எப்படி?

குற்றம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ரத்தக் கறை படிந்த சட்டை, கால்சட்டை, 1000 கிலோமீட்டர் தொலைவில் செய்யப்பட்ட இ- வாலட் பணப் பரிவர்த்தனை ஆகியவை கட்டாக்கில் உள்ள போலீசாருக்கு ஒரு கொலை வழக்கு குற்றவாளியை குற்றம் நடந்த 30 மணி நேரத்திற்குள்  கண்டுபிடிக்க உதவியது.வெள்ளிக்கிழமை, கட்டாக்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள கதாஜோதி ஆற்றங்கரையில் ஒரு பெண் சடலமும், அவரை வெட்டிக் கொல்லப் பயன்படுத்திய கத்தியையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.சனிக்கிழமை மாலை, முக்கிய சந்தேக நபர் ஓடும் ரயிலில் இருந்து பிடிப்பட்டார். மேலும் அவரது விசாரணைக்குப் பிறகு, வழக்கு முன்னேறியது, அதோடு மேலும் இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.முதன்முதலில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டபோது அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்ததால் அவரது இரு கைகளிலும் இருந்த டாட்டூ அடையாளம் தவிர வேறு எந்த தடயமும் இல்லை.விரைவில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை அலசவும், பல்வேறு காவல் நிலையங்களில் தாக்கல் செய்யப்பட்ட காணாமல் போன நபர்களின் பதிவுகளை சரிபார்க்கவும் போலீசார் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த முயற்சிகள் உறுதியான பலனைத் தராததால், அருகில் உள்ள கிராமங்களில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தத் தொடங்கினர், மேலும் அந்தப் பெண்ணை அடையாளம் காண ஏதுவாக அவரின் டாட்டூவை காண்பித்து விசாரணை நடத்தினர். இந்தத் தேடுதலின் போது தான் போலீசாருக்கு பெரிய துப்பு கிடைத்தது – ஒரு சட்டை மற்றும் ஒரு ஜோடி கால்சட்டை இரண்டும் தைக்கப்பட்ட வரிசை எண் 3833 உடன் “நியூ ஸ்டார் டெய்லர்ஸ்” என்று எழுதப்பட்ட பேப்பர் டேக்குகள் கிடைத்தது.கட்டாக் காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) ஜக்மோகன் மீனா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “ஒடிசாவில் இந்த பெயர் அல்லது இதே போன்று பெயர்களைக் கொண்ட சுமார் 10 தையல்காரர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். இருப்பினும் எதுவும் வழக்குடன் ஒத்துப் போக வில்லை. அப்போது, கஞ்சம் மாவட்டத்தின் பஞ்சாநகர் பகுதியில் இதுபோன்ற ஒரு கடை இருப்பதாக அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து போலீசாருக்கு வாட்ஸ்அப் செய்தி வந்தது. ஆனால் அதுவும் ஒத்துப் போக வில்லை. “ஆனால் கடையில் இருந்த தையல்காரர் ஒரு முக்கியமான குறிப்பைக் கொடுத்தார். குஜராத்தில் இதுபோன்ற காகித டேக்பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்… அவர் குஜராத்தில் பல்வேறு இடங்களில் தையல்காரராகப் பணிபுரிந்ததால் இதை நம்பிக்கையுடன் சொல்ல முடிந்தது,” என்று மீனா கூறினார்.“சுமார் ஏழு-எட்டு கடைகளை சரிபார்த்த பிறகு, பொருத்தமான காகித குறிச்சொற் வடிவமைப்பு கொண்ட ஒரு கடை கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், வாடிக்கையாளரைப் பற்றிய உள்ளீட்டைக் கண்டறிய வரிசை எண் 3833 பயன்படுத்தப்பட்டது. ஆனால் என்ட்ரியில் ‘பாபு’ என்ற புனைப்பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, வேறு எதுவும் இல்லை, ”என்று கட்டாக் டிசிபி கூறினார்.மேலும் பாபு தனக்கு 100 ரூபாய் தர வேண்டி உள்ளது என கடைக்காரர் கூறியுள்ளார். மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட இ-வாலட்டில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் இதைச் செய்ததாகவும் கூறினார்.“அந்த எண்ணை அழைத்தபோது, ​​அது பாபுவின் நண்பருடையது என்பது தெரிந்தது. இந்த நண்பரிடமிருந்து, பாபுவின் உண்மையான பெயர் ஜெகநாத் துஹூரி, ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மஹாகலபடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிதாரா சோபாலாவில் வசிக்கும் 27 வயதானவர் என்பதை நாங்கள் அறிந்தோம், ”என்று மீனா கூறினார்.போலீஸ் கமிஷனர் எஸ். தேவ் தத்தா சிங் கூறுகையில்,  போலீசார் அவரது தொலைபேசி எண்ணையும் பெற்று அதை முதலில் ஆந்திராவில் இருந்ததை கண்டுபிடித்தனர், பின்னர் இடம் மாறிக்கொண்டே இருப்பதைக் கண்டனர். இறுதியில், போலீசார் இந்த இடங்களை ஒரு ரயில் பாதையில் வரைபடமாக்கினர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஓடும் ரயிலில் இருந்தார் என்ற முடிவுக்கு வந்தனர்.”நாங்கள் மேலும் விவரங்களைச் செம்மைப்படுத்தி, நேரத்தைப் பொருத்தியதால், ஒடிசாவிலிருந்து வரும் ரயில் ஆந்திரா வழியாக ராயகடாவில் மீண்டும் ஒடிசாவிற்குள் நுழைவதற்கு முன்பு செல்கிறது என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம்” என்று சிங் கூறினார்.சனிக்கிழமையன்று, ராயகாட் போலீஸ் அதிகாரிகள் சாதாரண உடையில் ரயிலில் ஏறி,  சோதனை நடத்தினர். ராயகாட் மற்றும் முனிகுடா நிலையங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் தேடுதல் நடத்தியதில், சந்தேக நபரை கண்டுபிடித்ததாக கமிஷனர் கூறினார்.விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ஜெகநாத் துஹூரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனர் என்பதையும், அவர் தனது சகோதரர் பலராம் துஹூரி மற்றும் உறவினர் ஹபி துஹூரி ஆகியோருடன் சேர்ந்து இந்தக் கொலையை செய்ததாகக் கூறப்பட்டதையும் போலீசார் அறிந்தனர். மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.இறந்தவர் பலராமின் மனைவி என்றும், அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.ஆங்கிலத்தில் படிக்க:   A tailor’s tag and e-wallet payment: How Odisha Police zeroed in on accused within 30 hours of finding unidentified bodyதொடர்ந்து திருமண தகராறு காரணமாக இந்த குற்றம் நடந்ததாக டிசிபி கூறினார், பலராம் தனது மனைவி வேறு ஒரு உறவு வைத்திருப்பதாக சந்தேகம் அடைந்து கொலை செய்ததாகவும் கூறினர். டிசிபியின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குஜராத்தில் இருந்து கொலை ஆயுதத்தை வாங்கி உள்ளார், மேலும் கொலை செய்ய அந்தப் பெண்ணை தனி இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் என்றும் கூறினார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன