இலங்கை
அர்ச்சுனா எம்.பிக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அர்ச்சுனா எம்.பிக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அவருக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ அதிகாரி பதவியை ராஜினாமா செய்யாததால், எம்.பி.யாக இருக்க அவர் தகுதியற்றவர் என கூறி, பொதுநல வழக்குரைஞரான ஓஷல ஹேரத் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, இந்த விவகாரம் இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (CA) எடுத்துக்கொள்ளப்பட்டு , 2025 ஜனவரி 15 அன்று ஆதரவுக்காக நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.