உலகம்
சிரியாவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

சிரியாவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!
சிரியாவிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத்மின் ஆட்சி கடந்த ஞாயிறன்று வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் நிர்வாகத்தை ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் எதிரணியினர் இடைக்கால அரசாங்கத்தைப் பதவி ஏற்றுள்ளனர்.
புதிய ஆட்சியாளர்கள் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.