Connect with us

இலங்கை

பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு: கல்வியமைச்சு!

Published

on

Loading

பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு: கல்வியமைச்சு!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பான தகவல்களை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதி முதல் முதல் மார்ச் மாதம் 14ம் திகதி வரை முதற் கட்டம் இடம்பெறும்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை இரண்டாம் கட்டம் இடம்பெறும்.

ஏப்ரல் மாதம் 21ம் திகதி முதல் மே மாதம் 9ம் திகதி வரை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Advertisement

இரண்டாம் தவணையானது மே மாதம் 14ம் திகதி முதல் ஓகஸ்ட் 07ம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

மூன்றாம் தவணை இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது. அதற்கமைய ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 17ம் திகதி வரை முதலாம் கட்டம் இடம்பெறவுள்ளது.

மேலும் நவம்பர் மாதம் 17ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 19ம் திகதி வரை இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெற உள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன