இலங்கை
யாழில் அதிகாரிகளின் அசமந்தத்தால் உயிரிழந்த மாடு! வீதியில் குவிந்த பொதுமக்கள்

யாழில் அதிகாரிகளின் அசமந்தத்தால் உயிரிழந்த மாடு! வீதியில் குவிந்த பொதுமக்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள தட்டா தெரு சந்தியில் மின்சார கசிந்து மாடு ஒன்று இறந்ததை அடுத்து மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவியுள்ளது.
இச்சம்பவம் இன்றிரவு (17-12-2024) யாழ். தட்டா தெரு சந்தியில் இடம்பெற்றுள்ளது.
மின்சார கசிவால் மாடு இறந்ததை அறிந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகரிகளுடன் எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மின்சார சபை , யாழ்.மாநகர சபை, RDA மீது அதிகாரிகள் மாறி மாறி குற்றச்சாட்டியும் யாருமே பெறுப்புக்கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.