உலகம்
ரஷ்ய துருப்புக்களை சுட்டுக் கொன்ற வடகொரியா!

ரஷ்ய துருப்புக்களை சுட்டுக் கொன்ற வடகொரியா!
வட கொரிய படைவீரர்கள் எட்டு ரஷ்ய துருப்புக்களை சுட்டுக் கொன்றுள்ளதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரிய வீரர்கள் உக்ரைன் வீரர்கள் என கருதி தவறுதலாக ரஷ்ய வீரர்களை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
கிரெம்ளின் துருப்புக்களுக்கு உதவுவதற்காகக் கொண்டுவரப்பட்ட 12,000 வட கொரியப் படையிருக்கும் ரஷ்யப் படைகளுக்கும் இடையில் மொழி பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில், எட்டு ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.