சினிமா
Allu Arjun: அல்லு அர்ஜுன் கைதுக்கு பிறகு எகிறிய ‘புஷ்பா 2’ வசூல்.. 10 நாட்களில் இவ்வளவு கோடியா?

Allu Arjun: அல்லு அர்ஜுன் கைதுக்கு பிறகு எகிறிய ‘புஷ்பா 2’ வசூல்.. 10 நாட்களில் இவ்வளவு கோடியா?
ஐதராபாத்தில் புஷ்பா 2 திரைப்பட முதல் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனுக்கு வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
ஐதராபாத்தில் புஷ்பா 2 திரைப்பட முதல் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 வயதான பெண் உயிரிழந்த நிலையில் அவரது 8 வயது மகன் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் அச்சிறுவனுக்கு விட்டு விட்டு காய்ச்சல் வருவதாகவும், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. 10 நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் 1292 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Pushpa2TheRule crosses Massive 1292 CRORES GROSS in 10 days 💥💥
The HIGHEST GROSSER OF INDIAN CINEMA IN 2024 ❤🔥
Book your tickets now!
🎟️ https://t.co/tHogUVEOs1#2024HighestGrosserPushpa2#Pushpa2#WildFirePushpa
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku… pic.twitter.com/FexdmfGejB
உலகம் முழுவதும் பத்தே நாட்களில் ஆயிரம் கோடி வசூலை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுன் கைதான அடுத்த நாளில் முந்தைய நாளை விட 71 சதவீதம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.