சினிமா
PR வேலை பார்க்கும் செளந்தர்யா!! வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்ஜே ஆனந்தி..

PR வேலை பார்க்கும் செளந்தர்யா!! வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்ஜே ஆனந்தி..
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் சத்யா, தர்ஷிகா குறைந்த வாக்குகள் பெற்று எவிக்ட்டாகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட நிலையில் கடுமையான போட்டிகள் பிக்பாஸ் போட்டியாளருக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சில வாரத்திற்கு முன் வெளியேறி ஆர்ஜே ஆனந்தி கொடுத்த பேட்டியொன்றில் வெளியே வந்ததும் செளந்தர்யாவின் உண்மை முகம் என்ன என்று தெரிய வந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.அதில், செளந்தர்யா பற்றி பேச இப்போது விருப்பம் இல்லை, வீட்டில் இருக்கும்போது அவரை எனக்கு பிடித்திருந்தது.வெளியே வந்தப்பின் அவரின் PR வேலைகள் பற்றி தெரிந்ததும் பிடிக்கவில்லை. மக்கள் எப்படி பார்க்கிறாரக்ள் என்று எனக்கு தெரியவில்லை, அவரை நான் இப்போது பிளேயராகவும் காம்படேட்டராக நான் அவரை பார்க்கவில்லை. டைட்டில் வின்னராக முத்துக்குமரன் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார் ஆஜே ஆனந்தி.