இலங்கை
இதுவரையில் 16 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!

இதுவரையில் 16 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!
இலங்கையில் இதுவரை 16 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து இன்று (18) பிற்பகல் 3:30 மணி நிலவரப்படி 6,000 மெட்ரிக் டன் கச்சா அரிசியம் 10,000 நெல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முதல் அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் பின்னர் இதுவரை 16,000 மெற்றிக் தொன் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.