Connect with us

இலங்கை

இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு… சட்டமா அதிபர் அளித்த விளக்கம்!

Published

on

Loading

இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு… சட்டமா அதிபர் அளித்த விளக்கம்!

நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு குறித்து நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபரினால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு குறித்து தேசிய பெறுகைகள் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பரிந்துரைகளைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஊடாக அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இன்றையதினம் (18) சட்டமா அதிபர் அறியப்படுத்தியுள்ளார்.

குறித்த கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனுவை சவாலுக்கு உட்படுத்தி எபிக் லங்கா தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் சுமதி தர்மவர்தன குறித்த விடயம் தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன