இலங்கை
காலாவதியான தடுப்பூசியை செலுத்தியதால் ஏற்பட்ட விபரீதம் : தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் !

காலாவதியான தடுப்பூசியை செலுத்தியதால் ஏற்பட்ட விபரீதம் : தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் !
பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மாத காலாவதியான தடுப்பூசிகளை செலுத்தியதன் காரணமாகவே குறித்த மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து , கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பம்பஹின்ன சந்தியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் எனவும் மருத்துவ மையத்தின் வசதிகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.