இலங்கை
சகல கல்வித் தகைமைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகும் சஜித்!

சகல கல்வித் தகைமைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகும் சஜித்!
தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18.12) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாளை காலை, நான் பெற்ற அனைத்து கல்வித் தகுதிகளையும் இந்த அவையில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன். பட்டப்படிப்பு சான்றிதழ் மட்டுமல்ல, அதைத் தாண்டிய அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்கவுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.