Connect with us

இந்தியா

தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய ராகுல் காந்தி!

Published

on

Loading

தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய ராகுல் காந்தி!

இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் நாட்டு மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ராகுல் காந்தி இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.
டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தவும் அவர் இந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.

மீனவர்களை கைது செய்வதோடு மட்டுமன்றி, மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், குறித்த மீன்பிடி படகுகளை மீட்க இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி கோரியுள்ளமை குரிப்பிடத்தக்கது. (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன