Connect with us

இலங்கை

யாழ்ப்பாணத்தில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

Published

on

Loading

யாழ்ப்பாணத்தில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு 60 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட காஸ் அடுப்பு, சிலிண்டர், 60 ஆயிரம் லீட்டர் கோடா என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதான நபரையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன