Connect with us

உலகம்

ரஸ்ய அணுசக்தி பாதுகாப்புப் படையின் தலைவர் உயிரிழப்பு!

Published

on

Loading

ரஸ்ய அணுசக்தி பாதுகாப்புப் படையின் தலைவர் உயிரிழப்பு!

ரஷ்ய அணுசக்தி பாதுகாப்பு படைப்பிரிவின் பிரதானியான சிரேஷ்ட இராணுவ ஜெனரல் Igor Kirillov மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் பாதுகாப்பு பிரிவு தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக அல் ஜஷீரா செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய நேரப்படி இன்று காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பு கட்டிடத்தொகுதியொன்றிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் ஸ்கூட்டர் வண்டியில் குண்டு பொருத்தப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

Advertisement

300 கிராம் கொண்ட வெடிப்பொருட்கள் அடங்கியதாக தயாரிக்கப்பட்ட குண்டே இவ்வாறு வெடித்துள்ளது. ரிமோட் கருவி கொண்டு குண்டு இயக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் இராணுவ ஜெனரலின் உதவியாளரும் உயிரிழந்துள்ளார். 54 வயதான Igor Kirillov  2017ம் ஆண்டு முதல் ரஷ்ய பாதுகாப்பு பிரிவின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் துறை பிரதானியாக செயற்ப்பட்டு வந்துள்ளார்.

அவருக்கு பிரித்தானியா, கெனடா உள்ளிட்ட நாடுகளில் நாடுகளில் தடை காணப்படுகிறது. உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் அந்நாட்டின் மீது இரசாயன ஆயுத தாக்குதல்களை நடத்தியதாக Kirillov மீது குற்றச்சாட்டும் காணப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன