Connect with us

இலங்கை

வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வழிக்காட்டுதலின் கீழ் வியாபாரி ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு!

Published

on

Loading

வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வழிக்காட்டுதலின் கீழ் வியாபாரி ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு!

ஹோமாகம, பனாகொட, பெலதாகொட, ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீடொன்றின் மீது இன்று (18.12) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

 9 மிமீ தோட்டாக்களை சுடும் திறன் கொண்ட பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், இரண்டு தோட்டா உறைகள் மற்றும் ஒரு உயிருள்ள தோட்டாவும் வீட்டின் முன் சாலையில் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

 வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் வியாபாரியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த வீட்டின் உரிமையாளர் மேலும் பல போதைப்பொருள் வியாபாரிகளிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாக மெகொட பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

 துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  சம்பவ இடத்திற்கு வந்த நுகேகொட பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன