இலங்கை
அன்டிஜென் கருவிகளைக் கொள்வனவு மோசடிகள் தொடர்பாக விசாரணை!

அன்டிஜென் கருவிகளைக் கொள்வனவு மோசடிகள் தொடர்பாக விசாரணை!
கொரோனாத் தொற்றுக் காலத்தில் அன்டிஜென் கருவிகளைக் கொள்வனவு செய்யப்பட்ட மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அன்டிஜென் கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கு அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது என்றும் என்றும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் அன்டிஜென் கருவிகளைக் கொள்வனவு செய்ய 2.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக எதிர்காலத்தில் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். (ப)