உலகம்
கனடாவில் துப்பாக்கிச் சூடு!

கனடாவில் துப்பாக்கிச் சூடு!
கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம், லோரன்ஸ் அவன்யூ மற்றும் ஹோர்டன் பார்க் வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் இருந்ததாகவும்
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]