Connect with us

இலங்கை

காலி சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்… 4 பேர் வைத்தியசாலையில்!

Published

on

Loading

காலி சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்… 4 பேர் வைத்தியசாலையில்!

காலி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில், பூஸ்ஸா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்றையதினம் (19-12-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த மோதல் சம்பவம் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தாவின் ஆதரவாளர்கள் மற்றும் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் கஞ்சிபானி இம்ரானின் ஆதரவாளர்கள் குழுவிற்கும் இடையிலேயே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்டியாகொட பகுதியில் உள்ள வீடொன்றில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேக நபர்களும் காயமடைந்தவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன