Connect with us

உலகம்

தவளை விஷத்தை குடித்த நடிகை உயிரிழப்பு.. மூட நம்பிக்கையால் நேர்ந்த சோகம்!

Published

on

தவளை விஷத்தை குடித்த நடிகை உயிரிழப்பு.. மூட நம்பிக்கையால் நேர்ந்த சோகம்!

Loading

தவளை விஷத்தை குடித்த நடிகை உயிரிழப்பு.. மூட நம்பிக்கையால் நேர்ந்த சோகம்!

பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகளில் பலர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். அப்படி ஒரு சோகமான செய்தி மெக்சிகோவில் இருந்து வருகிறது. மெக்சிகன் குறும்படங்களில் நடித்த நடிகை ஒருவர் உடலை தூய்மைப்படுத்தும் என நம்பி தவளை விஷம் குடித்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் உயிரிழந்தார். 33 வயதான மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ் என்ற நடிகை, பாரம்பரிய சடங்கின்போது தவளை விஷம் கொண்ட பானத்தை குடித்ததால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் சடங்கு என்று தென் அமெரிக்கவினர் சிலர், தவளை விஷம் கொண்ட பானமான டிரிங்க்கிங் காம்போ என்ற வினோத சடங்கை நடத்தியுள்ளனர். ராட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளையின் விஷத்தை எடுத்துக் கொள்வதே இந்த சடங்காகும். இந்த நடைமுறை ஆபத்தானது என்று அங்கீகரிக்கப்பட்டதாகவும், இருப்பினும் இன்னும் நடைமுறையில் உள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

மதச் சடங்குகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ், இது ஆபத்தானது என்று அறிந்தும் இந்த சடங்கில் கலந்து கொண்டு தவளை விஷத்தை குடித்தார். இதனையடுத்து அவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. நேரம் ஆக ஆக அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்குப் போனதையடுத்தது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

‘கம்போ’ என்ற சடங்கு உடலில் இருந்து நச்சுகளை அகற்றி அதை சுத்தப்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. விழாவின் ஒரு பகுதியாக அவர் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடித்ததாகவும், பின்னர் அவரது தோலில் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

அறிக்கைகளின் படி, இந்த சடங்கில் பங்கேற்பவர்கள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிக்க வேண்டும். பின்னர் அவர்களின் தோலில் சிறிய தீக்காயங்கள் உருவாகின்றன. பின்னர் தீக்காயங்கள் மேல் தவளையின் சளி போடப்படும், அதில் விஷம் உள்ளது, இதனால் போட்டியாளரின் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது மற்றும் உடலில் இருந்து நச்சுத்தன்மையை வெளியேற்ற வாந்தி எடுக்கப்படுகிறது.

சில நாடுகளில் இந்த பானம் தடைசெய்யப்பட்டாலும், பழங்குடியினர் இந்த சடங்கை நீண்ட காலமாக பயன்படுத்துகின்றன. இந்த சடங்கில் பங்கேற்ற பிறகு, ரோட்ரிக்ஸ் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை அனுபவித்ததாக அறிக்கை கூறப்படுகிறது, இது சடங்கின் ஒரு பகுதியாக நம்பப்படுகிறது. இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை குடித்த சிறுது நேரத்தில், அவருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. அவரது தோழி அவரை மருத்துவமனைக்கு அழைத்த போது, இது உடலை தூய்மைப்படுத்துகிறது என கூறி மருத்துவ உதவியை நாட மறுத்து விட்டார். நேரம் ஆக ஆக அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் ரெட் கிராஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன