Connect with us

இலங்கை

முதலாவது சம்பியன் பட்டத்தை வென்ற ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி

Published

on

Loading

முதலாவது சம்பியன் பட்டத்தை வென்ற ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி

ஜெவ்னா டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (19) இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட்டில் முதலாவது சம்பியன் பட்டத்தை சூடி ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் வரலாறு படைத்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் அத்தியாயத்தின் தொடக்கப் போட்டியிலும் முதாலாவது தகுதிகாண் போட்டியிலும் ஜெவ்னா டைட்டன்ஸிடம் தோல்வி அடைந்த ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் இறுதிப் போட்டியில் பதிலடி கொடுத்து வெற்றியீட்டி முந்தைய தோல்விகளை நிவர்த்தி செய்துகொண்டது.

Advertisement

முதல் சுற்றிலும் தகுதிகாண் சுற்றிலும் தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டியில் விளையாடியதால் ஜெவ்னா டைட்டன்ஸ் வெற்றிபெறும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றும் ஜெவ்னா டைட்டன்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்ததால் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் 10 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

Advertisement

குசல் பெரேரா (9) மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார். ஆனால் முதலாவது விக்கெட்டில் மொஹம்மத் ஷாஸாத்துடன் 16 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன