இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் தவறானவை அறிக்கை வெளியீடு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் தவறானவை அறிக்கை வெளியீடு!
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புச் செலவுக்காக கடந்த பதினொரு மாதங்களில் 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று வெளியான அறிக்கைகள் உண்மையற்றவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,
முன்னாள் ஜனாதிபதிக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருளுக்காக மட்டுமே கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களாக இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் சம்பளத்துக்காக அதிக தொகை செலவிடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை அல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (ப)