Connect with us

இலங்கை

முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

Published

on

Loading

முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

   முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன் படகொன்று வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகு மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது.

Advertisement

படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கினர்.

Advertisement

அதேவெளை படகில் இருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயீனமுற்ற நிலையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன