Connect with us

இலங்கை

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் இதுவரை 110 பேர் பாதிப்பு!

Published

on

Loading

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் இதுவரை 110 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி. ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
தற்போது பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 28 பேரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். 
கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 6 நோயாளர்களும் யாழ். போதனா மருத்துவமனையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்றுவரை ஏறத்தாழ 7ஆயிரத்து200 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும், பாதிக்கப்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட சுகாதாரமருத்துவ அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ளது. 
இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துச்செல்லவுள்ளது என்றார். (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன