இலங்கை
இரவு வேளைகளில் கனமழைக்கு வாய்ப்பு!

இரவு வேளைகளில் கனமழைக்கு வாய்ப்பு!
இலங்கையின் பல மாவட்டங்களிலும் இன்று (20) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது