இந்தியா
பிபின் ராவத் மரணத்திற்கு இதுதான் காரணமா.. வெளியான அதிர்ச்சி தகவல்!

பிபின் ராவத் மரணத்திற்கு இதுதான் காரணமா.. வெளியான அதிர்ச்சி தகவல்!
கடந்த 2021 ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, கோவையில் இருந்து உதகைக்கு ஹெலிகாப்டரில் மனைவி மதுாலிகா உள்ளிட்ட 11 பேருடன் பிபின் ராவத் சென்றபோது, குன்னூர் அருகே மலை மீது மோதி விபத்தில் சிக்கியதில் அனைவரும் உயிரிழந்தனர்.
நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி விபத்தில் இறந்தது சர்ச்சையான நிலையில், விமானப்படை விபத்துகள் தொடர்பாக விசாரிக்கும் பாதுகாப்புத் துறை நிலைக்குழு இதையும் ஆய்வு செய்யத் தொடங்கியது.
2017 முதல் 2022 வரையிலான அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 5 ஆண்டுகளில் விமானப்படை தொடர்புடைய 34 விபத்துகள் நிகழ்ந்ததாகவும், பிபின் ராவத் உயிரிழந்தது, ஹெலிகாப்டரை இயக்கிய குழுவின் தவறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.