Connect with us

விளையாட்டு

பிப். 23-ல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்… போட்டி போடும் 2 மைதாங்கள்!

Published

on

Champions Trophy 2025 India vs Pakistan on 23 February Dubai or Colombo venues in race to host match Tamil News

Loading

பிப். 23-ல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்… போட்டி போடும் 2 மைதாங்கள்!

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகி வருகிறது.  இந்த சூழலில்,  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் சில நிபந்தனைகளுடன் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்றும், இந்தியாவுக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும்  ஐ.சி.சி. அறிவித்துள்ளது.மேலும், 2024 – 2027 வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும், தற்போது போன்றே அந்த தொடர்களிலும் பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்கள் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும் அதிகாரபூர்வமாக ஐ.சி.சி. கூறியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தின் தேதி வெளியாகியுள்ளது. இந்த தொடருக்கான பட்டியலை அதிகாரபூர்வமாக ஐ.சி.சி. வெளியிடாத நிலையில், இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டம் குறித்த தகவல் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. அவ்வகையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும் என்றும், துபாய் அல்லது கொழும்பில் இப்போட்டி நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன