Connect with us

இலங்கை

புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை!

Published

on

Loading

புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை!

புத்தளத்தில் உள்ள வண்ணாத்திவில்லு இரணவில்லு பகுதியில் காட்டு யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.

Advertisement

குறித்த யானை கைவிடப்பட்ட விவசாய கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.  

இவ்வாறு உயிரிழந்த யானை 30 வயது என மதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 அடி உயரம் கொண்டு காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யானைக்கு மிருக வைத்தியரினால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்க உள்ளதாக இதன்போது கூறப்பட்டுள்ளது.

Advertisement

  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன