Connect with us

இலங்கை

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை!

Published

on

Loading

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை!

இந்தியாவிலிருந்து வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என வடமாகாண கடலோடிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளரும், இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வடமராட்சியில் தனது கற்றொழில் வாடியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

அண்மையில் இந்தியாவிற்கு சென்ற எமது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இந்தியாவில் பிரதமர் மோடியை சந்தித்த போது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விடயம் மனிதாபிமானத்துடன் அணுகப்படும் என தெரிவித்திருந்தார். 

மேலும் எமது மீனவர்கள் எல்லை தாண்டி இயந்திர கோளாறுகாரணமாக சென்றதற்கே மியன்மாரில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபா 5. இலட்சம் குற்றப்பணமும்,  கடூளிய சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதே போன்று இலங்கையில் இறைமையுள்ள எமது கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களுக்கும் இவ்வாறான தண்டணைகள் வழங்கப்படவேண்டும் என்றும், எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தாத கடற்படை இந்த நாட்டிற்கு தேவைதானா எனவும் கேள்வியெழுப்பினார்.  (ப)
 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன