Connect with us

இலங்கை

சித்தப்பாவின் தாக்குதலில் உயிரிழந்த பெண்

Published

on

Loading

சித்தப்பாவின் தாக்குதலில் உயிரிழந்த பெண்

   கம்பஹா, ஹாபிட்டிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பல்லேவெல, ஹாபிட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஆவார்.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த பெண் தனது தந்தையின் சகோதரனுடன் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சித்தப்பாவின் தாக்குதலில் காயமடைந்த பெண் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன