உலகம்
நேபாளத்தில் அதிகாலை 4.8 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்!

நேபாளத்தில் அதிகாலை 4.8 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்!
நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது பூமிக்கடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.