சினிமா
புஷ்பா 2 எந்த ஓடிடியிலும் வெளியாகாது.! தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!

புஷ்பா 2 எந்த ஓடிடியிலும் வெளியாகாது.! தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!
2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படம் வெளியானது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியானது.புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வெளியாகி இதுவரையில் 1508 கோடிகளை வசூலித்துள்ளது.d_i_aஇதை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் ஓடிடியில் வெளியாக உள்ளதாக இணையதள பக்கங்களில் தகவல்கள் பரவியது. ஆனால் அதற்கு பட குழுவினர் தற்போது விளக்கம் அளித்து உள்ளனர்.இது தொடர்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி வதந்திகள் பரவிக் கொண்டுள்ளன. இந்த விடுமுறை சீசனில் புஷ்பா 2 படத்தை திரையரங்குகளில் கண்டு ரசியுங்கள். 56 நாட்களுக்கு படம் எந்த ஓடிடியிலும் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.இதே வேளை புஷ்பா 2 திரைப்படம் கோடி கோடியாக வசூலை வாரி குவித்த போதும் இந்த படத்தை பார்க்கச் சென்று உயிரிழந்த பெண் மற்றும் அவருடைய மகன் மூளைச்சாவடைந்த விடயமும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.