Connect with us

இலங்கை

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள்; அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்!

Published

on

Loading

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள்; அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்!

 மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத 481 மென்பான போத்தல்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு  கோட்டைமுனை பொது சுகாதார அதிகாரிகள் மேற்படி திடீர் தேடுதலை நடாத்தி மென்பானங்களை கைப்பற்றியிருந்தனர்.

Advertisement

பென்சாயிட் அசிட் எனப்படும் ஒரு விதமான மனித பாவனைக்கு உதவாத திரவம் மென்பான போத்தல்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருத்தம் இல்லாத நிறக்கலவையும் அதில் இணைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறித்த மென்பான தயாரிப்பு நிறுவனம், வினியோகஸ்தர், விற்பனையாளர் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்தனர்.

அத்துடன் கைப்பற்றப்பட்ட மென்பானங்களை அழிக்குமாறும் ஏனைய விற்பனை நிலையங்களில் இருக்கும் பானங்களை அகற்றுமாறும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்ஷினி உத்தரவிட்டார் .    

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன