Connect with us

உலகம்

மாயமான MH370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்!

Published

on

Loading

மாயமான MH370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்!

10 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியாவின் MH370, விமானத்தை மீள தேடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. விமானத் துறையில் தீர்வு காண முடியாத ஒரு மர்மமாக மலசிய விமானம் MH370, மாயமான சம்பவம் உள்ளது.

விமானத்தை தேடும் பணிகளை மீள ஆரம்பிக்க வேண்டுமென பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தத. 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி விமான ஊழியர்கள் உள்ளடங்களாக 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கி பயணித்த விமானம் தெற்கு இந்து சமுத்திரம் வழியாக பயணிக்கும் போது மாயமானது.

Advertisement

விமானத்தை தேடும் பணிகள் வெளிநாடுகளுடன் உதவியுடன் மேற்கொண்ட போதிலும் எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. விமானத்தின் தேடுதல் பணிகளுக்கு அதிக செலவு ஏற்ப்பட்டதால் 2018ம் ஆண்டு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தெற்கு இந்து சமுத்திரத்தில் மீண்டும் தேடுதல் பணிகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவை தளமாக கொண்ட Ocean Infinity என்ற ஆய்வு நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்த விடயத்தில் தமது உறவுகளை இழந்தவர்களுக்காக பொறுப்புடன் இந்த பணியை ஆரம்பிக்கவுள்ளதாக நிறுவனத்தைச் சேர்ந்த என்டனி லோகி தெரிவித்துள்ளார். விமானத்தின் பாகங்களை கட்டாயம் கண்டுபிடித்து அவற்றை உறவினர்களிடம் ஒப்ப்படைவள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதேவேளை இந்த தேடுதல் பணிக்கென Ocean Infinity  நிறுவனத்திற்கு 70 மில்லியன் அமெரிக்க டொலர் கட்டணமாக செலுத்தப்படவுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன