Connect with us

இலங்கை

மிரிகானாவுக்கு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள அகதிகள்!

Published

on

Loading

மிரிகானாவுக்கு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள அகதிகள்!

திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஏனையோரை இன்றைய தினம் மிரிகானா முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . 

Advertisement

இதன் பின்னர் படகை செலுத்தி வந்த குற்றச்சாட்டில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம்  இவர்கள் மிரிகான எனும் இடத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் 

இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிசாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றதாகவும் 

மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை ஐ.நா பாராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில்  இலங்கை நாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவித்ததுடன் 

Advertisement

இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் 

மேலும்  வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்து குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும்  

இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் எட்டு இலட்சம் ரூபாய் வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர் . 

Advertisement

இவர்களில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட  39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.[ஒ]
 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன