Connect with us

இலங்கை

ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் படகுகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

Published

on

Loading

ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் படகுகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளின் ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் பல நாள் படகுகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேல், மத்திய மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படுவதுடன் அந்த கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும், அதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்பரப்பைச் சூழவுள்ள கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன